இந்திய தூதரகத்தை நாளையு தினம் முற்றாக முடக்கப் போவதாக யாழ் மாவட்ட கடல்தொழிலாளர் கூட்டுறவு சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சம்மேளனத் தலைவர் வே.தவச்செல்வம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மீனவர்களின் பிரச்சனைகளை கவனிப்பதை விட்டு ஜனாதிபதித் தேர்தலில் பேரம் பேசி எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம் என தமிழ்த் தலைமைகள் நினைப்பதாக யாழ் மாவட்ட கடல்தொழிழாளர் கூட்டுறவு சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ளது.
வடக்கு மாகான கடற்தொழிலாளர் திணைக்களம் சர்வாதிகாரப் போக்குடன் செயற்படுவதாகவும், அரசியல் வாதிகளின் கைப்பொம்மையாகவே திணைக்களம் இயங்குவதாக யாழ் மாவட்ட கடல்தொழிழாளர் கூட்டுறவு சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ளது.