ஐக்கிய தேசியக் கட்சி இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்றிருக்கவில்லை.
இந்நாட்டின் பழமை வாய்ந்த மற்றும் பிரதானமான அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் பாராளுமன்ற கன்னி அமர்வில் கலந்து கொள்ளாத முதல் சந்தர்ப்பம் இதுவாகும் .
பொதுத் தேர்தலில் ஒரு ஆசனத்தைக்கூட வெற்றிபெறாத நிலையில், தேசியப் பட்டியல் ஆசனத்திற்கான உறுப்பினரின் பெயரையும் ஐக்கிய தேசியக் கட்சி இதுவரையில் பெயரிடவில்லை.