மாத்தறை – ஹக்மனயில் டிப்பர் வாகனம் மோதியதில் படுகாயமடைந்த மற்றுமொரு பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்துள்ளார்.
ஹக்மன வீதியில், வீதித் தடை பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் மீது டிப்பர் வண்டி மோதிய சம்பவம் கடந்த மாதம் (ஆடி 13) ஆம் திகதி இடம்பெற்றது.
இதன்போது, ஹக்மன பொலிஸ் நிலையத்தின் கடமையாற்றிய 36 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்தார்.
விபத்தில் காயமடைந்த மேலும் 2 அதிகாரிகள் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.