நல்லாட்சி அரசாங்கத்தால் வழங்கப்பட்டு தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள 6,548 திட்டமிடல் உதவியாளர்களுக்கான நியமனங்களை விரைவில் மீள வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமாரால் இவ் விடயம் வலியுறுத்தப்பட்டது. நேற்று (வியாழக்கிழமை) மாலை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இவ்வாறு கூறினார்.
அதேவேளை கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட 1300 இரண்டாம் மொழி ஆசிரியர்களுக்கான நியமனங்களையும் விரைவில் மீள வழங்குமாறும் இவ்விடயங்கள் தொடர்பாக நேற்று நடைபெற்ற எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் அரவிந்தகுமார் குறிப்பிட்டுள்ளார்.
அவ்விடயத்தை கருத்திற் கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் இது தொடர்பில் விசேட பிரேரணை ஒன்றை முன் வைப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார் அதன்மூலம் திட்டமிடல் உதவியாளர்களுக்கும், இரண்டாம் மொழி ஆசிரியர்களுக்கும் இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கு விடை கிடைக்கும் என அரவிந்தகுமார் மேலும் தெரிவித்துள்ளார்.