தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களிற்கும், இலங்கைக்கான இந்திய தூதருக்குமிடையிலான சந்திப்பு இன்று மாலை இடம்பெறவுள்ளது.
கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தில் மாலை சந்திப்பு நடக்கும்.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அங்கத்துவ கட்சிகளின் தலைவர்கள் த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், மாவை சேனாதிராசா ஆகியோருடன், பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொள்வர்.