புவியியல் ஆய்வு மையம் மற்றும் சுரங்க பணியகத்தில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் ஆராய்ந்து விசாரணை செய்ய மூவர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அத்துடன்,குறித்த நிலையங்களில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் தமக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.