மேலும் சில இலங்கையர்கள் நாடு திரும்பினர்

Flight2
Flight2

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 70 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இன்று (திங்கட்கிழமை) காலை நாடு திரும்பியுள்ளனர்.

டோஹா கட்டாரில் இருந்து 21 பேரும் இந்தியாவின் அகமதாபாத்தில் இருந்து 49 பேருமே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

நாடு திரும்பிய அனைவருக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பீ.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனை முடிவுகள் வெளிவந்தவுடன், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.