கல்கிசை கடலில் இறந்த மற்றொரு இளைஞரின் சடலம் மீட்பு

202001270132296702 College students are immersed in the sea 2 killed SECVPF
202001270132296702 College students are immersed in the sea 2 killed SECVPF

கல்கிசை கடலில் நீராடச் சென்ற நிலையில் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட நுவரெலியா பூண்டுலோயாவைச் சேர்ந்த இளைஞர்களில் இரண்டாவது இளைஞரின் சடலம் நேற்று வெள்ளவத்தை பகுதியில் கரையொதுங்கியது.

கல்கிசை கடலுக்கு நீராடச் சென்ற நிலையில் இரண்டு இளைஞர்கள் நேற்று முன்தினம் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போய் இருந்தனர்.

அவர்களில் ஒருவரின் சடலம் நேற்று காலை கரையொதுங்கிய நிலையில் மற்றுமொருவரின் சடலம் நேற்றிரவு வெள்ளவத்தைப் பகுதியில் கரையொதுங்கியதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

இந்த நிலையில் அவர்களது சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்காக களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.