சிறி விக்கிரம ராஜசிங்கன் கடைசியாக கையொப்பமிட்டது தமிழில்;பிறேமச்சந்திரன்

unnamed 2 7
unnamed 2 7

கண்டியை ஆட்சி செய்த கடைசி மன்னன் சிறி விக்கிரம ராஜசிங்கன் கடைசியாக கையொப்பம் இட்டது தமிழிலேயே எனவும் இன்றும் தலதா மாளிகையில் அதனை பார்க்க முடியும் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருந்து தெரிவிக்கும் போதே சுரேஸ் பிறேமச்சந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் ஒல்லாந்தர் இலங்கைக்கு வந்த காலத்தில் இலங்கையில் நீதிமன்ற மொழியாக தமிழே காணப்பட்டதாகவும், சிங்களம் வளர்ச்சி அடையாத மொழியாகவே இருந்தது எனவும் தெரிவித்துள்ளார்.