சந்தேக நபருக்கு நீதிமன்றத்தில் வைத்து ஹெரோயின் கொடுக்க முற்பட்டவருக்கு வழங்கப்பட்ட தண்டனை!

vbhgt 1
vbhgt 1

விளக்கமறியலில் வைக்கப்பட்டு, வழக்கு விசாரணைக்காக வெல்லவாய நீதிவான் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்ட சந்தேக நபர் ஒருவருக்கு நீதிமன்ற சிறைக்கூடத்தில் வைத்து ஹெரோயின் வழங்க முற்பட்ட நபர் ஒருவருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை மற்றும் 10,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெல்லவாய, மஹவெலமுல்ல பகுதியை பகுதியை சேர்ந்த 24 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.