வீசா காலாவதியான நிலையில் கல்கிஸைப் பகுதியில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜைகள் 13 பேர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீனா மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த 20 முதல் 44 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் பூகொடை விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தமைக்கு அமைய, கல்கிஸைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேரம் வீதி பிரதேசத்திலுள்ள விடுதியொன்றில் வைத்து இந்தச் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி, வீசா இன்றி தங்கியிருந்த குற்றச்சாட்டில் 09 பெண்களும், 04 ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்களில் பெண்ணொருவர் சட்ட விரோதமான முறையில் வைத்திருந்த 10 ஆயிரத்து 300 சிகரெட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காகக் கல்கிஸைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.