நிறைவடைந்துள்ள பெண் ஒருவரின் உண்ணாவிரத போராட்டம்!

images 9 1
images 9 1

பலாங்கொட பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட நிலப்பரப்பில் உள்ள 100 அடி மரம் ஒன்றில் ஏறி பெண் ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

இந்த போராட்டம் தற்சமயம் நிறைவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலாங்கொட – தயவின்ன – ஹதகரிய பிரதேசத்தினை சேர்ந்த 37 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ளார் என கூறப்பட்டிருந்தது.

தாம் வசித்து வந்த நிலப்பரப்பினை சட்டபூர்வமாக பெற்றுக் கொடுக்குமாறு இவ்வாறு மரம் ஒன்றில் ஏறி உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் குறித்த நிலப்பரப்பு தொடர்பிலான நீதிமன்றில் வழக்கு உள்ளதாக பிரதேச செயலாளர், எமது செய்தி பிரிவு வினவியதற்கு சுட்டிக்காட்டியிருந்தனர்.

எவ்வாறாயினும் குறித்த பெண்ணுக்கு மற்றும் ஓர் நிலப்பரப்பு வழங்கப்பட்டாலும் அதனை ஏற்க மறுப்பதாக குறிப்பிட்டிருந்தது.