க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான திகதி வெளியாகியது

12 2

2020 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன்படி 2020 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ்  தெரிவித்துள்ளார்.

மேலும் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி முடிவடைகிறது.

அத்தோடு 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 04 ஆம் திகதி புதிய தவணைக்காக பாடசாலைகளை ஆரம்பிக்க  தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.