சட்டவிரோதமாக நிலப்பரப்புகளை கையகப்படுத்துவோருக்கு சட்ட நடவடிக்கை

Azaleas Rhododendrons planting after 1 2
Azaleas Rhododendrons planting after 1 2

இலங்கை நில மீட்பு மற்றும் மேம்பாட்டுக் கழகத்தால் சட்டவிரோதமான முறையில் நிலப்பரப்புகளை கையகப்படுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அதன் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் எம்.எஸ்.ஆர்.டபிள்யூ டி.சொய்சா கூறியுள்ளார்.

சட்டவிரோத நிலப்பரப்புகள், இலங்கைக்கு ஒரு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் எதிர்காலத்தில்  பொலிஸாருடன் இணைந்து சட்டவிரோத நிலப்பரப்புகள் மற்றும் கட்டுமானங்கள் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.