மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்காக சென்ற 231 பேர் நாடு திரும்பியுள்ளனர்

625.500.560.350.160.300.053.800.900.160.90 34
625.500.560.350.160.300.053.800.900.160.90 34

மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் வாய்ப்புக்காக சென்ற 231 இலங்கையர்கள் இன்று(வெள்ளிக்கிழமை) நாடு திரும்பியுள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 42 இலங்கையர்கள் அதிகாலை 1.26 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அதேபோன்று டோஹாவிலிருந்து 22 இலங்கையர்கள் அதிகாலை 1.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இத்துடன் சவுதி அரேபியாவிலிருந்து 167 இலங்கையர்கள் அதிகாலை 5.40 மணிக்கு மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த அனைத்து பயணிகளும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.