கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Coronavirus Recoverd 1 copy
Coronavirus Recoverd 1 copy

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பியவர்கள் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 988ஆக அதிகரித்துள்ளது.