எதிர்வரும் 10 நாட்களுக்கு கவனமாக இருக்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தல்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 35
625.500.560.350.160.300.053.800.900.160.90 35

சூரியன் இலங்கைக்கு நேரே உச்சம் கொடுப்பதால் எதிர்வரும் 10 நாட்களுக்கு கவனமாக இருக்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சூரியன் தெற்கு நோக்கி நகரும்போது இன்று முதல் செப்டம்பர் 07 வரை இலங்கைக்கு அருகிலுள்ள அட்சரேகைகளுக்கு மேலே சூரியன் உச்சம் கொடுப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.

இன்று மதியம் 12:11 மணிக்கு கரம்பன், கொக்குவில் மற்றும் சரசாலை பகுதிகளுக்கு சூரியன் மிக நெருக்கமாக இருக்கும் என்று திணைக்களம் மேலும் கூறுகிறது.

இவ்வாறான வேளைகளில் மக்கள் தேவையின்றி வெளியில் செல்லுதல், மற்றும் சிறுவர்கள் முதியவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.