கிளிநொச்சி விபத்தில் விஷேட அதிரடிப்படையினர் ஒருவர் பலி!

20200829 170218
20200829 170218

கிளிநொச்சி ஏ-9 வீதி 155 கட்டைப் பகுதியில் இன்று மாலை 4.00 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி நகர் பகுதியில் இருந்த வந்த டிப்பர் வாகன சாரதியின் அசமந்தப் போக்கில் திருப்பிய போது விசேட அதிரடிப்படையினர் மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல் பாரதிபுரம் பக்கம் திருப்பிய ரிப்பேர் வாகனத்துடன் மோதுண்டு பின்னால் வந்த டிப்பர் வாகனத்துடன் விசேட அதிரடிப்படையினரும் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் மற்றவர் படுகாயங்களுடன் கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இல 55,படிநெகுடுவாவ,மயில்கஸ்வொவ சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 32 வயதுடைய தனபாலகே ரோஷன் பிரதீப் (பி.சி 87958) இவ்விபத்தில் பலியாகியுள்ளார்.

இது தொடர்பான டிப்பர் வாகன சாரதி இருவரும் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.