மேல் மாகாணத்தில் திட்டமிடப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் 25 குழுக்கள் செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிறைச்சாலைகளில் உள்ள திட்டமிடப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் குழுவின் உறுப்பினர்களால் தொடர்ந்தும் குற்றச்செயல்கள் வழிநடத்தப்படுவதால் குற்றங்களை ஒடுக்குவதில் சிக்கல் ஏற்படுவதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து தெரிவித்துள்ளார்.