மத்திய கிழக்கு நாடுகளான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்கு தொழில்வாய்ப்புகளுக்காக சென்ற 322 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.
அதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ஈ.கே.-648 என்ற விமானத்தில் எட்டு இலங்கையர்கள் அதிகாலை 1.30 மணிக்கு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அதேபோல் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யு.எல் -226 என்ற விமானத்தில் மேலும் 272 இலங்கையர்கள் அதிகாலை 5.05 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இதேவேளை கட்டாரின் டோஹாவிலிருந்து கட்டார் ஏயர்வேஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான கியூஆர் -668 என்ற விமானத்தில் 42 இலங்கையர்கள் அதிகாலை 1.45 மணிக்கு நாட்டை வந்தடைந்தனர்.
விமான நிலையத்தை வந்தடைந்த அனைத்து பயணிகளும் பி.சி.ஆர்.சோதனைக்கு உட்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.