கிரேன்பாஸ் நவகம்புர பிரதேசத்தில் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட “மோல் சூடி” என்று அழைக்கப்படும் தீபிகா குமார லக்ஷமி ரன்தெனிகே என்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட 35 வயதுடைய பெண்ணின் வீட்டை சோதனைக்கு உட்படுத்திய போது சுமார் 20 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், குறித்த பெண்ணின் பெயரில் உள்ள வங்கி கணக்கு புத்தகம் ஒன்றும் மற்றும் வங்கி அட்டை ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த வங்கிக் கணக்கில் கடந்த சில தினங்களில் மாத்திரம் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் அண்மித்த பணம் புழக்கத்தில் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.