அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 107ஆவது ஜனன தின நிகழ்வுகள் நேற்று (30) (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பு மற்றும் மலையகத்தின் பல பகுதிகளிலும் இடம்பெற்றன.
இதனை முன்னிட்டு காலிமுகத்திடலிலுள்ள பழைய பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள அமரர். சௌமிய மூர்த்தி தொண்டமானின் உருவ சிலைக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மலர் மாலை அணிவித்தார்.
இந்த நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் நிதிச் செயலாளருமான மருதபாண்டி ராமேஷ்வரன், முன்னாள் ஊவா மாகாண அமைச்சரும், பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான், முன்னாள் மத்திய மற்றும் ஊவா மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனில் மலையக வரலாறு பற்றிய பல தகவல்களை அறிந்து கொள்ளக்கூடிய வகையில் காணொளி காட்சிகளுடன் கூடிய ஆவணக் கண்காட்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது