ரணிலுக்கு அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி ஆணைக்குழு!

freepressjournal import 2018 03 Prime Minister Ranil Wickremesinghe

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (திங்கட்கிழமை) முன்னிலையாகவுள்ளார்.

குறித்த ஆணைக்குழு கடந்த 21ஆம் திகதி முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

குறித்த தினத்தில் தனக்கு முன்னிலையாக முடியாது என ரணில் விக்ரமசிங்க ஆணைக்குழுவுக்கு அறிவித்திருந்தார்.

மேலும் ஒகஸ்ட் 31ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக அவர் அறிவித்திருந்தார். அதற்கமைய அவர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகவுள்ளார்.