கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

02

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 102 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளாரென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேநேரம், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 883 ஆக பதிவாகியுள்ளது.

அத்தோடு, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 207 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்பதோடு, இந்த வைரஸ் காரணமாக இலங்கையில் இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.