சீரற்ற வானிலை காரணமாக 2 ஆயிரத்துக்கும்மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

001 159
001 159

நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, நாடளாவிய ரீதியில் 14 மாவட்டங்களில், இரண்டாயிரத்து 761 குடும்பங்களை சேர்ந்த 11 ஆயிரத்து 389 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அனர்த்தங்களினால் 34 வீடுகள் முழுமையாகவும், 613 வீடுகள் பகுதியளவிலும் பாதிக்க்படப்டுள்ளன.

இந்த நிலையில், 2 இடர்தங்கல் முகாம்களில், 47 குடும்பங்களை சேர்ந்த 179 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதில் காலி மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, காலி மாவட்டத்தில் ஆயிரத்து 671 குடும்பங்களை சேர்ந்த 7 ஆயிரத்து 166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் 370 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்து 418 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கம்பஹா மாவட்டத்தில் 271 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்து 139 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அனர்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான வசதிகளை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.