ஆதரவு வழங்கினார்கள் எதிர்க்கட்சியை சேர்ந்த 9 பேர்

.jpg
.jpg

எதிர்கட்சியை சேர்ந்த ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் 20வது திருத்தம் சமர்ப்பிக்கப்படும் போது, அதற்கு ஆதரவளிப்பதாக அரசாங்கத்தின் முக்கிய பிரமுகரிடம் வாக்குறுதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஐக்கிய தேசியக்கட்சி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட சிறுபான்மை கட்சிகள் 20ஆவது அரசியலமைப்பின் திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் .

இந்த நிலையில் குறித்த 20ஆவது திருத்தச்சட்டமானது தனிநபருக்கு நிறைவேற்று அதிகாரம் தடையின்றி முழுமையாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மாத்திரமே கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் அந்த கட்சியினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .