நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

dt 200602 covid 19 update 800x450
dt 200602 covid 19 update 800x450

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 121 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் நேற்று இரவு அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய இருவர் மற்றும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் ஆகியோருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்றைய தினத்தில் மாத்திரம் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 11 பேர் குணமடைந்து நேற்றைய தினம் தமது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து தொள்ளாயிரத்து 18 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் தொற்றுக்குள்ளான 191 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மேலும், 79 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக காணப்படுகின்றது.

மேலும் கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 2 இலட்சத்து 37 ஆயிரத்து 610 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.