கொழும்பு மற்றும் மருதானைக்கு இடையிலான புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது இன்று காலை 8.15 களுத்துறையிலிருந்து நீர்கொழும்பு நோக்கி புறப்பட்டுச் சென்ற புகையிரதம் ஒன்று குறித்த பகுதியில் தடம்புரள்வுக்கு உள்ளாகியுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பாதிப்பேற்பட்ட புகையிரத பாதையை சீர்செய்யும் பணிகளில் புகையிரத நிலைய ஊழியர்களும், அதிகாரிகளும் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.