கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..

covid 1140 1140x440 1
covid 1140 1140x440 1

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,926ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி, கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மற்றுமொரு ஒருவர் பூரண குணமடைந்ததை தொடர்ந்தே குறித்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,123ஆக காணப்படுகிறது.

மேலும், கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 185 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.