மேல் நீதிமன்றத்தினால் ராஜித சேனாரத்னவுக்கு அழைப்பாணை

ggggggggggg
ggggggggggg

எதிர் வருகின்ற ஒக்டோபர் 29 ஆம் திகதி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, மீன்வள துறைமுகக் கழகத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியானகே மற்றும் அதன் நிர்வாக இயக்குநர் நில் ரவீந்திர முனசிங்க ஆகியோரை கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது .

குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது;

மீன்வள துறைமுகக் கழகத்தின் இயக்குநர்கள் குழுவை மீன்வளத் துறைமுகத்தை ஒரு தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடுமாறு வற்புறுத்தியன் மூலம் அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்பட்டதாக தாக்கல் செய்யப்பட வழக்கு தொடர்பாக இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியராச்சி இந்த அழைப்பாணையை விடுத்துள்ளார் .

மேலும் ஐந்து குற்றச்சாட்டுகளில் மூவருக்கும் எதிராக குற்றச்சாட்டை இலஞ்ச ஆணைக்குழு பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது .