பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட்ட பிரதி காவல் துறை மா அதிபர் லலித் ஜயசிங்கவை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பில் எந்தவித எதிர்ப்பும் இல்லை என பதில் காவல் துறை மா அதிகர் சீ டி விக்ரமரத்ன தெரிவித்தார்.
அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அறிக்கை எதிர்வரும் தினங்களில் தேசிய காவல் துறை ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.