சுகாதாரதுறை அமைச்சரை சந்தித்தார்; கோபால் பாக்லே

gggg
gggg

சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோருக்கிடையில் சுகாதார அமைச்சில் இன்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது .

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நட்புறவு மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்துவது தொர்பாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த சந்திப்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முதற் செயலாளர் வைத்தியர் சுஷில் குமார் , உயர்ஸ்தானிகராலயத்தின் பொருளாதாரம் மற்றும் வணிகப் பிரிவின் அதிகாரி வைத்தியர் ராகேஷ் பாண்டே ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .