போதை வில்லைகளுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது

34

பாலதுறை பகுதியில் பாரவூர்தியொன்றில் பயணித்துக்கொண்டிருந்த மூன்று சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவர்களிடமிருந்து 18,900 போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இப் போதை வில்லைகளின் பெறுமதியானது 4.7 மில்லியனுக்கு அதிகம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.