திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்தில் வைத்து கேரள கஞ்சா போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டிருந்த சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது சந்தேகத்திற்குரியவர்களிடம் இருந்து 500 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை தலைமையக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.