சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகரவுக்கு, நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.
பிரேமலால் ஜயசேகரவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ரிட் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையிலேயே நேற்றைய தினம் இந்த அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று பிற்பகல் 1 மணி முதல் மாலை 6.30 வரை நாடாளுமன்ற சபை அமர்வுகள் இடம்பெறவுள்ளன.
இதற்கமைய, அவர் இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய, பிரேமலால் ஜயசேகர இன்றைய தினம் நாடாளுமன்றத்துக்கு அழைத்துவரப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனிய தெரிவித்துள்ளார்.