போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் மேல் மாகாணத்தில் 547 பேர் கைது

Thiththikfkum isaffgi copy 1 620x330 2

பொது இடங்களில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானங்கள் பயன்படுத்திய குற்றச்சாட்டுக்காக 547 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று(திங்கட்கிழமை) மாலை 6.00 முதல் இரவு 8.00 மணிவரை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுள் அநேகமானோர் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி மொத்தமாக 89 கிராம் ஹெரோயினுடன் 265 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேநேரம் கஞ்சா பாவனையில் ஈடுபட்ட 136 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ஐஸ் போதைப்பொருளுடன் 27 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து 24 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

அது தவிர மேல் மாகாணத்தில் பொது இடங்களில் சட்டவிரோதமாக மதுபானம் அருந்திய குற்றச்சாட்டுக்காக 107 நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேபோன்ற திடீர் சோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என மேல் மாகாண உப பொலிஸ்மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.