19 தொடர்பில் மௌனம் கலைத்தார் மஸ்தான்

50

19ஆவது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தவறு அதில் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தவே மக்கள் ஆணையை தந்திருக்கிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார். வவுனியா தெற்கிலுப்பைக்குளத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில்  கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்,

அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

19ஆவது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தவறு அதில் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும். என்றே மக்கள் ஆணையை தந்திருக்கிறார்கள். சில சட்டங்கள், சில அதிகாரங்கள் ஜனாதிபதிக்கு இல்லாவிட்டால் மூன்று சமூகத்தவரும் வாழ்வதில் பல பிரச்சனை இருக்கின்றது. ஆகவே நாம் அதனை சீர் செய்வோம். 
கடந்த காலத்தை விட தற்பொழுது இன வாதக்கருத்துக்கள் அதிகமாக  நம் சமூகத்தில் இருக்கின்றது.

அந்த நிலையிலும் என்னை சிறுபான்மை சமூகத்திலிருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற செய்த பெருமை மக்களையே சாரும். முழு இலங்கையிலும் இனவாதத்திற்கு இடமில்லை என சுட்டிகாட்டப்பட்டிருக்கின்றது. ஆனால் தற்பொழுது நடந்து முடிந்த பாரளுமன்ற தேர்தலில் தான் உணரமுடிந்தது.  சிலர் கூறுகின்றனர் வவுனியாவில் ஒருங்கிணைப்பு தலைவராக இல்லாதுவிட்டால் வவுனியாவில் ஒன்றும் செய்ய முடியாதென. அவ்வாறில்லை. நான் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராக இருந்த நேரத்திலும் வன்னி மாவட்டமான மூன்று மாவட்டங்களின் அபிவிருத்திக்கும் உதவி செய்திருந்தேன். இப்பொழுதும் வவுனியா மாவட்டத்தில் வீதி புனரமைப்பிற்கு வழி செய்து கொடுத்திருக்கின்றேன். நாம் சமூகத்தினை அபிவிருத்தி செய்ய வேண்டுமெனில் ஆளும்கட்சியில் இருந்தால் தான் எதுவும் செய்யமுடியும்.

விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் வாக்களிப்பில் ஆளும் கட்சியினர் 2/3 பங்கு வெற்றி பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும். மக்கள் ஐந்து வருட அரசியல் அதிகார ஆணையை எங்களிடம் தந்திருக்கிறார்கள். 
19ஆவது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தவறு அதில் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும் என்றே மக்கள் ஆணையை தந்திருக்கிறார்கள். சில சட்டங்கள், சில அதிகாரங்கள் ஜனாதிபதிக்கு இல்லாவிட்டால் மூன்று சமூகத்தவரும் வாழ்வதில் பல பிரச்சனை இருக்கின்றது. கடந்த அரசியலில் எவ்வளவு அரசியல் குழப்பங்கள், அரசியல் குழறுபடிகள் இதனால் மக்கள் வெறுப்படைந்திருக்கிறார்கள். ஆகவே நாம் அதனை சீர் செய்வோம். 
எதனை செய்தாலும் எதிர் கட்சியினர் பிழையாக பார்க்கிறார்கள். அரசுடன் இணைந்து நாட்டின் அபிவிருத்திக்கும், மக்களின் வாழ்கை தரத்தினை உயர்த்துவதற்கும் எனக்கு தரப்பட்ட அதிகாரத்தினை பயன்படுத்தி உதவிகளை செய்வேன் என மேலும் தெரிவித்தார்.

20200906153346 IMG 0678
20200906153818 IMG 0684
20200906153639 IMG 0679