அரசியலில் இருந்து ஓய்வுபெற தயாராகிவரும் -மகிந்த

4ca17609bbf04f835dd292a4353c2a93 XL
4ca17609bbf04f835dd292a4353c2a93 XL

எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு பிரதமர் மகிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வுபெற தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சில தினங்களுக்கு முன்னர் ஆங்கில தேசிய பத்திரிகை ஒன்று இதனை உறுதிப்படுத்தியிருந்தது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 18 ஆம் திகதியுடன் 75 வதுஅகவையினை பூர்த்தி செய்யும் பிரதமர் மகிந்த ராஜபக்சஅதனைத்தொடர்ந்து இரண்டு வருடங்களில் ஓய்வுபெற்ற பின்னர் ஏற்படும் வெற்றிடத்திற்கு பசில் ராஜபக்ச நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிறைவேற்றப்படவுள்ள புதிய அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தில் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட உள்ளது. இதனடிப்படையில், மகிந்த ராஜபக்ச ஓய்வுபெற்ற பின்னர் பிரதமர் பதவிக்கு ஏற்படும் வெற்றிடத்திற்கு பசில் ராஜபக்ச நியமிக்க வாய்ப்புக்கள் உள்ளதாக அந்த ஆங்கில ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.