எதிர்கட்சி தலைவரின் இணைப்பு செயலாளராக உமாச்சந்திரா பிரகாஷ் நியனம்..!

0111
0111

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசாவின் இணைப்பு செயலாளராக உமாச்சந்திரா பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட உமாச்சந்திரா பிரகாஷ் எதிர்க்கட்சித் தலைவரின் இணைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டது.

நேற்று காலை எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.