தனிமைப்படுத்தலில் இருந்து 136 பேர் வெளியேறவுள்ளனர்.

IMG 9889
IMG 9889

கட்டாய தனிமைப்படுத்தல் நடைமுறைகளை வெற்றிகரமாக நிறைவு செய்த மேலும் 136 பேர் இன்று அவர்களது சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படவுள்ளனர் .

இதுவரை மொத்தமாக 38,863 பேர் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து அவர்களது இடங்களுக்கு திரும்பியுள்ளனர் என்று கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் குறிப்பிட்டுள்ளது .

மேலும் முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் 57 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 6,176 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது .