20 புதிய கட்சிகளை நேர்முகத்தேர்வுக்கு அழைத்தது தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு!

4ca76859 election commition 850 1 850x460 acf cropped
4ca76859 election commition 850 1 850x460 acf cropped

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் இரண்டாவது நேர்முகத்தேர்வு இன்று (09) நடைபெறவுள்ளது.

இதனடிப்படையில், முதலாவது நேர்முகப்பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட 20 கட்சிகளுக்கு இன்று இரண்டாவது நேர்முகத்தேர்வு இடம்பெறவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

பதிவிற்காக விண்ணப்பித்த 159 புதிய அரசியல் கட்சிகளில், 20 கட்சிகள் தெரிவு செய்யப்பட்டதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

தொடர்ச்சியாக 4 வருடங்கள் அரசியலில் ஈடுபட்டிருத்தல், கட்சியை நடாத்திச் செல்வதற்கான நிதி கையிருப்பில் இருத்தல் உள்ளிட்ட பல காரணிகள், புதிதாக பதிவு செய்யப்படும் அரசியல் கட்சிகளுக்கு தேவையான விடயங்கள் என தேசியதேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.