முல்லைத்தீவில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் விக்டர் குழுவின் தலைவன் நேவி நாதன் அல்லது நல்ல நாதன்புள்ளே நேவிநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த விக்டர் கும்பல் தொடர்பாக பாதுகாப்பு தரப்பினரின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் முல்லைத்தீவு முகாம் அதிகாரிகள் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது விக்டர் கும்பலின் தலைவர் நேவி நாதன் அல்லது நல்லநாதன் புள்ளே நேவிநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் முள்ளியவளை பகுதியை சேர்ந்த 20 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் இதே கும்பலின் மற்றுமொரு முக்கியஸ்தர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.