பெருந்தோட்ட பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரிய உதவியாளர்களை ஆசிரிய வெற்றிடங்களுக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கோரிக்கை விடுத்துள்ளார் .
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம்இடம்பெற்ற அமர்வில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர் தோட்ட பாடசாலைகளில் மிக நீண்டகாலமாக இந்தஆசிரிய உதவியாளர்கள் பணியாற்றி வருவதாகவும் இவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட் டால் பெருந்தோட்ட பாடசாலைகளில்காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் .