மாடறுப்பு தடை தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் ஒரு மாதத்திற்குள்…!

08 02 14 ERD COW EXPO PHOTO 3
08 02 14 ERD COW EXPO PHOTO 3

நாட்டில் மாடறுப்பு தடை தொடர்பிலான அமைச்சரவை பத்திரத்தை ஒரு மாதத்திற்குள் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அதனுடன் தொடர்புடைய அமைச்சரான பிரதமர் மகிந்த ராஜபக்ஸவினால் முன்வைக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பசுவதைக்கு எதிரான யோசனை நடைபெற்று முடிந்த ஆளுங்கட்சியின் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டிருந்ததோடு, அதற்கு நாடாளுமன்ற குழு அனுமதி வழங்கியுள்ளது.

அது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை புத்தசாசனம், சமயம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.