நாட்டில் சீரற்ற காலநிலை தொடரும்- வளிமண்டலவியல் திணைக்களம்!

21325998 506838913000499 894212866 n
21325998 506838913000499 894212866 n

நாட்டில் நிலவியுள்ள சீரற்ற காலநிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதற்கமைய மேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்வதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாக அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன், களுத்துறை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும், சப்ரகமுவ மாகாணத்தின் சில பகுதிகளிலும், 50 மில்லிமீற்றருக்கு அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாட்டில் பல்வேறு பகுதிகளில் காற்றின் வேகம் 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.