வயோதிபரின் சடலம் மீட்பு!

death
death

வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொல்துவ பாலத்துக்கு அருகிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் உறவினரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.ஹோகந்தரயைச் சேர்ந்த 74 வயதுடையவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர், சில தினங்களுக்கு முன்னர் தனது வீட்டிலிருந்து எவருக்கும் எதுவும் கூறாமல் புறப்பட்டுச் சென்றிருந்தார் எனவும், உயிரிழந்தவரது மகனினால் அன்றைய தினம் தலங்கம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வெலிக்கடைப் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.