மஹிந்த- மட்டு.மாவட்ட தொழில்சார் வல்லுனர்களுக்கிடையில் சந்திப்பு

mahinda visit batti
mahinda visit batti

எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சாவிற்கும் மட்டக்களப்பு மாவட்ட தொழில்சார் வல்லுனர்களுக்கும் இடையிலான சந்திப்பு பாசிக்குடா பாஸ் வில்லா சுற்றுலா விடுதியில் ஞாயிற்றுக்கிழமை (Oct.27) மாலை இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் மட்டக்களப்பு வாழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தொழில்சார் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

நாங்கள் பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சாவை தேர்தலில் ஆதரிக்கின்றோம். அதற்கான ஒத்துழைப்பினையும் வழங்க தயாராகவுள்ளோம். தற்போதைய அரசாங்கம் மட்டக்களப்பு தமிழ் மக்களை கவனத்தில் கொள்ளவில்லை. மற்றைய சமூகம் முன்னேற்றியது போன்று எங்களுடைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களுக்கு எதையும் செய்யவில்லை. இனியும் இவர்கள் செய்யப் போவதில்லை என்று கருத்து தெரிவித்தனர்.