மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு!

hfh
hfh

மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோன் அவர்களின் விசேட பணிப்பின் பேரில் மேல் மாகாணத்தில் சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது .

நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை ஆறுமணி முதல் குறித்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 392 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதுடன் இவர்களுள் 152 பேர் போதைப்பொருள் மோசடியுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது .