சதோச நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணை பிற்போடப்பட்டுள்ளது.
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரட்ன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளதாக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் அப்போதைய வர்த்தக அமைச்சராக செயற்பட்ட ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவினால் சதோச நிறுவனத்தின் ஊழியர்கள் 153 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.