வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் நபரொருவர் கைது!

Arrest 4 1
Arrest 4 1

எம்பிலிபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கும்பகொட வீதி பகுதியில் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கும்பகொட வீதி – எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 37 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.